Pages

Wednesday, February 20, 2013

anbulla kadhalikku!!

என் முகம் தெரியாத காதலிக்கு உன் முகம் மட்டுமே நினைக்கும் காதலன் எழுதும் மடல் காதல் தெரியாதவன் நான் காதலை எனக்கு ஊட்டியவள் நீ கவிதையின் சந்தம் ரசித்தவன் நான் காவிய முத்தம் காட்டியவள் நீ இயற்கை எழிலை ரசித்தவன் நான் உன்னை மட்டுமே ரசிக்க மாற்றியவள் நீ கரம் தொட அஞ்சியவன் நான் என் தோள்களே உன் ஊஞ்சல்கள் என்றவள் நீ நண்பர்களை நேசித்தவன் நான் நண்பர்களை விரோதி ஆக்கியவள் நீ நயமாக பேசுபவன் நான் பிறர் நலிவடைய பேசுபவள் நீ என் குரல் உயர்ந்தாலோ அது ஆணாதிக்கம் என் குரல் தாழ்ந்தாலோ அது ஆண்மைன்மை பிறன் குரல் உயர்ந்ததால் பரவசம் பிறன் குரல் தாழ்ந்தால் அது பெண்ணீயம் காதல் என்பதை நீ அறிவாயா கட்டி தழுவது காதல் அல்ல காயப்படுத்துவது காதல் அல்ல கரிசனம் கட்டுவது காதல் பெற்றோருக்கு பயப்படுவது காதல் அல்ல பெற்றோரையும் மாற்றுவது காதல் அடைந்து கொள்வது காதல் அல்ல அடைத்து வைப்பதும் காதல் அல்ல தூய மலரின் மணம் காதல் காலை சூரியனின் ஒளி காதல் தேகம் தொடும் தென்றல் காதல் தெய்வ தரிசனம் காதல் காதல் பொய் சொல்வதில்லை காதல் அலைக்கழிப்பதில்லை காதல் பச்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை காதல் இதயங்களை உடைப்பதில்லை உண்மை காதல் உருகும் ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைக்கும் நீ அழுதால் தான் அழும் நீ சிரித்தாள் தான் சிரிக்கும். ஆம், நான் உண்மை காதலின் சின்னம் நீ? என்றென்றும் அன்புடன் காதலை மதிக்க தெரிந்த ஒருவன் காதலை மிதிக்க தெரிந்த ஒருவளுக்கு எழுதும் இதய ஒலி. Intended to be published on valentine day, delayed due to a small surgery i had to undergo!!

KURINCHI MALAR

குறிஞ்சி மலர் சுமார் 50 வருடங்களுக்கு முன் குறிஞ்சி மலர் என்ற வார்த்தை எனக்கு முதல் முறை பரிச்சயம் ஆனது. திரு நா பார்த்த சாரதி அவர்கள் கல்கியில் எழுதிய 'குறிஞ்சி மலர் ' என்ற தொடர் கதை என் வாழ்வின் பல பரிமாணங்களை எனக்கு புரிய முதல் விதை. குறிஞ்சி மலர் நாயகன் மற்றும் நாயகியான அரவிந்தனும் பூரணியும் ஒரு நல்ல ஆ ணுக்கும் ஒரு அன்பான பெண்ணுக்கும் நல்ல ஆதர்சனங்கள் . எம் முதல் காதல் குறிஞ்சி மலரின் மேல் ஏற்பட்டது இந்த வயதில் தான். பின்னர் ஒரு நாள் திரு நா பார்த்தசாரதி அவர்கள் கல்கத்தா தமிழ் மன்றத்துக்கு வருகை தந்த போது , அவர்களிடம் செலவழித்த அற்புத நிமிடங்கள் என் குறிஞ்சி காதல் பல மடங்கு அதிகமாக கரணம் ஆக அமைந்தது . 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் இந்த மலரை நான் பார்க்க சுமார் 20 வருடங்கள் காக்க நேர்ந்தது.என் திருமணத்துக்கு பின் கொடைக்கானல் சென்ற போது குறிஞ்சி ஆண்டவர் கோயிலும்,குறிஞ்சி பூக்காடும் எனக்கு காணக் கிடைத்தது.அந்த பரவச உணர்வை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .அனுபவம் என்பது தனி மனித உணர்வு வெளிப்பாடு என்று நான் உணர்ந்தது அங்கு தான் . 12 என்பதற்கு ஒரு தனி மகிமை உண்டு .கும்பகோணம் மகா மகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை தான்.ஒரு வருடம் என்பது 12 மாதங்கள் கொண்டது.கும்ப மேளா வருவதும் 12 வருடத்துக்கு ஒரு முறை தான் .ஒரு நாளின் மணிக் கணக்கை 12 மணி என்ற அளவில் தான் பகிர்த்து காண்கின்றோம். குறிஞ்சி மலரும் 12 வருடத்துக்கு ஒரு முறை காணக் கிடைக்கும் அதிசயம் . என் எண்ணங்கள் இப்போது ஏன் இந்த 12 என்ற எண்ணில் சுற்றி வருகின்றன என்ற கேள்விக்கு விடை என் ஹாங்காங் பயணத்தில் உள்ளது ஆம் .கடந்த 2001 டிசம்பர் மாதம் ஹாங்காங் மண்ணிடம் விடை பெற்று இந்தியா திரும்பியபோது மீண்டும் ஹாங்காங் மண்ணை மிதிப்போம் என்று நிச்சயமாக எண்ணவில்லை, வாழ்க்கை என்பது ஒரு வட்டம் , அதில் ஒரு சில அனுபவங்கள் மீண்டும் மீண்டும் நம்மை நம்மை வந்து அடைகின்றன என்பது, என் மகன் அவனுடைய படிப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, ஹாங்காங் சென்றபோது எனக்கு புலனாகியது.அவனை சந்திக்கும் எண்ணம் ஒரு காரணியாக இருந்து என்னை இயக்க, கடந்த இரண்டு வருடங்களாக உள்ளே இருந்த இந்த விதை, இப்போது முளை விட, குருவின் அருளும் குருநாதனின் அழைப்பும் ஒரு சேர ,யூனுஸ் பாயின் அன்பு இல்லம் வரவேற்புடன் காத்திருக்க , பிரசாத், ராம் போன்ற எண்ணற்ற நண்பர்களின் அன்பு நெஞ்சங்கள் காந்தமாக எனை இழுக்க 12 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஹாங்காங் மண்ணை தொடும் அந்த நன்நாளை முதல்முதல் குறிஞ்சி மலரை ஸ்பரிசித்த அந்த கணத்தில் நெஞ்சத்தில் எழுந்த பரவசத்துடனும்,ஆவலுடனும் எதிர் பார்த்து காத்து இருக்கின்றேன், அனைவருக்கும் அன்புடன் சம்பத் குமார்